ஆ ஆ மணல் இப்படி கொதிக்குது, ராத்திரி எப்படி கடல் காத்து அடிச்சிது, ஹ்ம்ம்ம் ராத்திரி மட்டுமே இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும். ஆ பசிக்குதே, பைல நாலணா கூட இல்ல, காலைல எவன் பிச்சை போடுவான் நமக்கு? பீச்க்கு ஓட வரவன் கைல காசு இல்லன்பான். அரசியல்வாதி பொழப்புடா சாமி. என்னடா பிச்சைக்காரன் அரசியல் பேசுறான்னு பார்க்குரீங்களா, இந்த பீச்ல வர காதல் ஜோடி தங்க குடும்ப மானம், இந்திய நாடோட கலாசாரம் இதோட டேய்லி பேப்பரையும் அனாதையா விட்டுட்டு போயிடுறாங்க. என்னடா பெரிய பேச்சு எல்லாம் பேசுறானு பார்க்குரீங்களா நானும் படிச்சி இருக்கேன்ங்க, அப்புறம் என் பிச்சை எடுகுற? நல்ல கேள்விங்க..எனக்கு வேண்டுதல் எதுவும் இல்லங்க பிச்சை எடுக்கணும்னு, என் விதி அப்படி. என்ன விதினு கேட்கிறீங்களா. அது என்னனா...இருங்க அங்க ஒருத்தர் கொழந்தைக்கு சூப் வாங்கி கொடுக்குறாரு அவர் கிட்ட போய் காசு வாங்கிட்டு வந்து கதைய தொடர்றேன்.
"ஏன்யா மாடு மாதிரி வளர்ந்து இருக்க, உழைச்சி திங்க தெரியாது, இப்படி மானங்கெட்டு போய் பிச்சை எடுக்கிரியே, போ போ காசு எல்லாம் தர முடியாது"
என்னங்க பாக்குறீங்க ஒண்ணும் பேசாம வந்துட்டேன்னா, நானும் பேசி இருப்பேன்ங்க ஆனா அந்த குட்டி பையன் இருந்தான் பாருங்க அவன் அவங்க அப்பாவ ஹீரொவா பாக்குரான், அவனுக்கு முன்னாடி அவர திட்டகூடாது. அவர் சொன்னது நியாயம் தானே, ஆனா அவரு நான் ஏன் என் வெட்கத்த விட்டு பிச்சை கேட்குறேனு யோசிச்சாரா? இல்ல நீங்கதான் முன்ன யோசிச்சி இருக்கீங்களா? எனக்கும் அப்பா அம்மா எல்லாம் இருந்தாங்க ஒரு காலத்துல, இதோ இந்த ஆள விட நல்லாவே எங்க அப்பா வாங்கி கொடுப்பாறு. அம்மா என்ன ராஜா மாதிரி பார்த்துக்கிட்டாங்க. அந்த லாரிக்காரன் மட்டும் ப்ரேக் போட்டு இருந்தானா என் அம்மா இருந்து இருப்பா நானும் இப்படி பிச்சை எடுக்க வேண்டி வந்துருக்காது. அப்பா அம்மா போனத்துக்கு அப்புறம் நல்ல பார்த்துகிட்டாரு, ஆனா அவருக்கும் உடல் சுகம் தேவை பட்டுச்சி, அப்பதான் அந்த சண்டாளிய வீட்டுக்கு அழச்சிட்டு வந்தாரு. நானும் சித்தினு பாசமாதான் கூப்பிட்டேன், அப்பா முன்னாடி நல்லாதான் தலய வருடுனா. அப்பா அடிக்கடி வெளியூர் போயிடுவாரு, அப்போ எல்லாம் எவனோ ஒருத்தன் வீட்டுக்கு வருவான், வந்து சித்தி கூட ரூம்ல போய் கதவ சாதிக்குவான், அப்புறம் கட்டில் ஆடுற சத்தம் மட்டும் கேட்கும், அப்போ புரியல ஆனா லேட்டா புரிஞ்ச்சி. ஒரு நாளு நான் ஸ்கூல்ல இருந்து சீக்கிரம் வீட்டுக்கு வந்தேன் அப்பா வழக்கம் போல வெளியூர் போயிருந்தாரு, நான் வந்தப்ப அந்த ஆளு வெளிய போனான், ரூம்குள்ள நுலஞ்ச போ, சித்தி புடவை கட்டிக்கிட்டு இருந்தா, என்ன பார்த்த சித்தி உதட்ட கடிச்சாங்க, "கதவ சாத்து" , சாத்தினேன். கைய புடிச்சி கிட்ட இழுத்தா, போனேன். அப்புறம் என்ன அப்படியே அவங்க மேல படுக்க வெச்சி... "சித்தி வலிக்குது சித்தி, விட்டுடுங்க....ஐயோ" கண்ல இருந்து தண்ணி தண்ணியா வந்துச்சி, சித்தி பக்கத்துல இருந்த தண்ணிய எடுத்து வேக வீகமா குடிச்சா..."அப்பாக்கிட்ட சொன்ன உங்க மிஸ் கிட்ட சொல்லிடுவேன்", பயந்துகிட்டு சொல்லலை. அன்னைக்கு நைட் தூக்கத்துள்ள கெட்ட கெட்ட கனவா வந்துச்சு. ஒண்ணுக்கு போகும்போது ரத்தமா போச்சி, செம வலி .. இப்படியே டேய்லி நடந்துச்சு ஒரு வாரத்துல என்னால பேனாவ பிடிச்சி எழுத முடியல, ஒழுங்கா படிக்க முடியல, அடுத்த பரிட்சையில பாஸ் பண்ணல, டீச்சர் எனக்கு உடம்பு சரி இல்லனு என் சித்தி கிட்ட சொல்லி வீட்டுக்கு அனுப்பிச்சிட்டாங்க சித்தி அப்பாகிட்ட புள்ளை வீட்டுலேயே இருக்கட்டும்னு சொல்லிட்டா. டேய்லி அவ ரூம்ல அது நடக்கும். அந்த ஆளும் வருவான்.இப்படியே 3 மாசம் ஓடி போச்சு, என் கைய தூக்க முடியல, நின்னா கீழ விழுந்துடுவேன். ஒரு நாள் அப்பா திடீர்னு வீட்டுக்கு வந்துட்டாரு, அந்த ஆளு ரூம்ல இருக்கறத பார்த்துட்டாரு கட்டைய எடுத்து ரெண்டு பேரயும் போட்டு தள்ளிட்டாரு. அப்புறம் அவரும் தூக்கில தொங்கிட்டாரு என்ன நெனச்சி பார்க்காமலேயே. அப்புறம் போலீஸ் வந்தாங்க போனாங்க, ஒறவினருங்க வந்தாங்க போனாங்க ஆனா யாரும் என்ன எடுத்துக்கல. பசினால பக்கத்து டீ கடைல வேலை கேட்டேன், டீ க்லாஸ் எடுக்க சொன்னான் ஆனா கை ஆடுனதுனால, க்ளாஸ் கீழ விழுந்து ஓடஞ்சி போச்சி, "ஐயோ அம்மா எறியுதே" "தூதேறி வெண்ணிய ஊத்துனா எரியாமா சோகமாவா இருக்கும்", அழுதுக்கிட்டே ஓடினேன் கடைசியா நின்னது இந்த மெரினா தான் அப்படியே அதோ அந்த பெஞ்ச்ல படுத்துட்டேன், எழுந்து பார்த்தா சுத்தி சில்லரையா இருக்கு. இப்படி தாங்க நான் பிச்சைகாரன் ஆனேன்.
வாழ்க்கைல தோத்தவங்க ஒண்ணு திரும்ப தயிரியமா எதிர்த்து நின்னு போராடுவங்க, இல்லாக்காட்டி தற்கொலை பண்ணிக்குவாங்க..ஆனா இந்த மூணாவது வகை இருக்காங்க பாருங்க என்ன மாதிரி, போராடவும் முடியாம, தற்கொலை பண்ணிக்கவும் தைரியம் இல்லாம, தங்க நிலைலேர்ந்து தாழ்ந்து கைநீட்டி பிச்சை எடுக்குரான் பாருங்க அவன் பொழப்பு கேடு கெட்ட பொழப்புங்க... இப்போ எங்கேயாவது ஒரு குழந்தய யாராவது கொஞ்சுனாலே பயமா இருக்குங்க...நாளைக்கு அந்த குழந்தயும் என்ன மாதிரி யாசகம் தேடி வருமோனு...
P.S: This is actually a script I wrote for a short film against CHILD SEXUAL ABUSE but it never materialized into a movie. I have tried to give it here in a story form, please forgive me if it’s weird. This is my first attempt in writing a story for a change without any screenplay/theater format. STOP CHILD SEXUAL ABUSE.